Samstag, 6. Juni 2009

கனவு

















தூங்கியவரையில்
நனவெனக் காட்டி
சுகமாய்த் தொடர்ந்தது
பொழுது
விடிந்தது என்று
விழித்துக் கொண்டதும்
கலைந்திருந்தது
கனவு!



-இந்துமகேஷ்

Donnerstag, 6. November 2008

கதை!


















மெளனித்திருந்த
என் முகம் பார்த்து
ஒருபொழுது கேட்டாள்:
"ஏன் ஒன்றும்
சொல்லாமல்..?"

சொல்வதற்கு
என்ன இருக்கிறது
பிரிவதற்கான
நேரம் நெருங்கும்போது?

"நீ கதை!"

எனைச் சூழ்ந்த மெளனம்
அவளிடத்தும்.

எதுவும் பேசாமல்
அவளே ஆனாள்
கதை!


-இந்துமகேஷ்

Samstag, 1. Dezember 2007

ஓடு

















உள்ளிருந்து ஓர்குரல்
உரத்துத் துரத்தும்
"ஓடு!"


மனத்தை அடக்கி
வாழ்வின் பொருள்புரிந்து
மெள்ளத் தளர்கையில்
உணரும் உடல்
வெறும்
ஓடு!

-இந்துமகேஷ்

Mittwoch, 21. November 2007

வெளி














மோனப் பெருவெளி
நான்மட்டும் தனியனாய்...!

என் மூச்சின் ஓசைமட்டும்
எனக்குத் துணையாக!

இந்தப் பெருவெளிக்குள்
இருந்து வெளிப்பட்டு
எங்கோ பறக்கத் தவிக்கும்
இதயம்.

இதயமும் ஓர் வெளியாய்
என்னைத் தன்னுள்
இழுத்து அடக்கும்.

மறுபடியும்
மோனப் பெருவெளிக்குள்
நான்...

-இந்துமகேஷ்

Samstag, 7. Juli 2007

கரை














தெளிவற்றுத் தெரியும்
திசைகள்!
குறைபாடு -
எந்தன் விழிகளிலா?
இல்லை
வெளிச்சம் குறைந்திருக்கும்
திசைகளிலா?
எதுவெனினும்
தொடரும் பயணம்
தொலைதூரம் தெரியும்
கரைசேரும் வரையேனும்.

-இந்துமகேஷ்

Freitag, 29. Juni 2007

முதுமை















காலம் கனியக்
கனிந்து வரும்
அனுபவங்கள்
கோலம் வரையும்

கொடுங் கனவாய்க்
காட்சிதரும்
வாழ்வின் பொருளை
வகைப் படுத்தும்

முதுமை இது-
சாவுக்காய் அழைக்கும்
தருணமல்ல
வாழ்வின்
முழுமை!

-இந்துமகேஷ்

Mittwoch, 6. Juni 2007

துடிப்பு














இணையவலைக் கடற்பரப்பில்
சிறுபடகாய் என் இதயம்

முத்துக்கள் தேடி
மூச்சடக்கி மூழ்காமல்
அலைகள் நடக்கும்
அழகுதனை இரசிக்கின்றேன்

என் இதயப் படகு
எட்டுகின்ற தூரம்வரை
எழுத்துத் துடுப்பெடுத்து
எந்தன் பயணம்.

-இந்துமகேஷ்